விளாத்திகுளம் அருகே எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்பங்களின் நிலை தொடர்பு குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் மகளிர் உரிமைத் தொகை குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு வருவாய்த்துறை அலுவலர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த மகளிர்களிடம் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் .செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் திருமதி.மல்லிகா ஆகியோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை?
அடுத்த
எதிர்க்கட்சிகள் முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள்- அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி?
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026