தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை பெருந்திருவிழாவானது இன்று வெகு விமர்சையாக திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணியளவில் கோவிலில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து கொடி வஸ்திரம் மற்றும் கொடி பட்டு நகர் முழுவதும் உலாவாக கொண்டு செல்லப்பட்டு பின் கோவில் கொடிமரத்தில் திருக்கொடியேற்றும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நந்தியம் பெருமான் மற்றும் கொடிமரத்திற்கு பால், சந்தனம், இளநீர், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விஷேச தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும், இத்திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் 9-ம் திருநாளை முன்னிட்டு நடைபெறும் திருக்கல்யாண வைபவமும், 10-ம் திருநாளை முன்னிட்டு நடைபெறும் திருத்தேரோட்டமும் விழாவின் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது....
Vilathikulam
சித்திரை திருவிழாக் கொடியேற்றம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.60 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு சார் நிலை கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.
அடுத்த
சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026