தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோவில் குமரெட்டையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் மாசி மக உற்சவ விழா இன்று வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணியளவில் கோவிலில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து கொடி வஸ்திரம் மற்றும் கொடி பட்டு கிராமம் முழுவதும் உலாவாக கொண்டு செல்லப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், இளநீர், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விஷேச தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும், இக்கோவிலின் மாசி மக உற்சவ விழாவின் 9-ம் நாள் திருவிழாவையொட்டி நடைபெறும் திருத்தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
Vilathikulam
பாலசுப்பிரமணியசாமி கோவில் மாசி மக உற்சவ விழா கொடியேற்றம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தார் சாலை சரியா போட்டு இருக்கா? அதிகாரிகள் ஆய்வு!
அடுத்த
காவல்துறை மற்றும் அரசு அலுவலர்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026