தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மனைவி ஜெகதாம்பாள் (75), ஜெகதாம்பாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து காணாமல் போன ஜெகதாம்பாளை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் 19-01-2024 வெள்ளிக்கிழமை காலை புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள கிணற்றில் மூதாட்டி ஜெகதாம்பாள் உயிரிழந்து கிடப்பதாக புதூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் இருந்த ஜெகதாம்பாளின் உடலை மீட்டனர்.ஜெகதாம்பாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று புதூர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் இதுகுறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் வெடிகுண்டு சோதனை!
அடுத்த
எம்ஜிஆர் போட்ட பிச்சையினால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026