விளாத்திகுளத்தில் சாலை வரி உயர்வை கண்டித்து டூரிஸ்ட் கார், வேன்உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அப்துல் கலாம் டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழக அரசு அறிவித்த சுற்றுலா வாகனங்களின் சாலை வரியை அதிகப்படியாக உயர்த்தியதை ரத்து செய்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அப்துல் கலாம் டூரிஸ்ட் கார், வேன் உரிமையாளர் நல சங்கத்தின் செயலாளர் செல்வ முருகன் தலைமையில் நடைபெற்றது, துணைத் தலைவர் முருகன்,பொருளாளர் அழகர் விக்னேஷ், துணைப் பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர், மணிகண்டன் வரவேற்பு உரையாற்றினார்,லத்திகா கண்ணன் சிறப்புரையாற்றினார், செய்யது யூசப் நன்றி உரையாற்றினார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், குளத்தூர், சூரங்குடி, பகுதி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
சாலை வரி உயர்வை கண்டித்து விளாத்திகுளத்தில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லாரி டிரைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.
அடுத்த
ஆதனூர் பாலத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேரில் ஆய்வு செய்தார்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026