தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  கோவில் குமரெட்டையாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்தன் என்பவரின் மகன் சின்ன அழகுமலை (48), சின்னஅழகுமலை அக்கிராமத்தில் உள்ள பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் ஆபாச சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விடுவதை ரவுடி சின்ன அழகுமலை வழக்கமாக வைத்துள்ளார், எதிர்த்து சின்ன அழகுமலையை கேள்வி கேட்டால்,என்னை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்டால் என்னை சாதியைச் சொல்லி திட்டினீர்கள் என்று உங்கள் மீது PCR வழக்கு தொடர்வேன் என்று மிரட்டல் விடுவதை சின்ன அழகுமலை வழக்கமாக வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவில் குமரெட்டையாபுரம் கிராமத்தில் சாலையில் வருவோர், போவோரை எல்லாம் மது போதையில் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து வந்த புகாரின் பேரில் காடல்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், ஏற்கனவே காடல்குடி காவல் நிலையத்தில் சின்ன அழகுமலை மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.