விளாத்திகுளம் அருகே சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை "நாணல் பூச்சி பவளப்பாம்பு" பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில், நேற்றிரவு மிகச்சிறிய அளவிலான, மெல்லிய உடலமைப்பு கொண்ட பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியில் இருப்பவர்கள் வித்தியாசமாக காணப்பட்ட இந்த அரிய வகை பாம்பை பத்திரமாக பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்த பாம்பை இனங்கண்ட உயிரின ஆராய்ச்சியாளர்கள், இது இந்தியாவிலேயே மிக வகை பாம்பான "நாணல் பூச்சி பவளப்பாம்பு" என்றும், இதன் மொத்த வளர்ச்சியே இவ்வளவுதான் என்றும் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி மிகச் சிறிய அளவில் மில்லிய உடல் அமைப்பு கொண்ட இந்த நாணல் பூச்சி பவள பாம்பு, நல்லபாம்புவிற்கு இருக்கும் அதே அளவு கொடூர விசத்தன்மை கொண்டது என்றும்... இது எண்ணிக்கை அடிப்படையில் மிகக் குறைவாக உள்ள பாம்பு வகையைச் சேர்ந்ததாகவும், அதிக ஈரப்பதமான பகுதிகளில் மட்டுமே வாழக்கூடியவை என்றும் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த "நாணல் பூச்சி பவளப்பாம்பை" வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
Vilathikulam
அரிய வகை "நாணல் பூச்சி பவளப்பாம்பு" பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் பெண் தீ குளித்து தற்கொலை.
அடுத்த
முதலியார் புதுக்குளம் மாட்டு வண்டி பந்தயம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026