தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கல்லூரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சர்வ வல்ல விநாயகர், ஸ்ரீ சண்முகநாதன் திருக்கோவில் 12 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக மற்றும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, இதில் திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை தூத்துக்குடி, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Vilathikulam
வைகாசி விசாகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு துலுக்கன்குறிச்சி ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு வழிபாடு!
அடுத்த
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு துலுக்கன்குறிச்சி ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு வழிபாடு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026