தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மகன் பாஸ்கர்வேல் (14), இவர் பூதலாபுரம் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் ஊரில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்ற பாஸ்கர்வேல் அதிக ஆழப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து கிராம மக்கள் நீண்ட தேடுதலுக்கு பின் நீரில்மூழ்கி இருந்த பாஸ்கர்வேல் உடலை மீட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார் பாஸ்கர்வேல் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
14 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரம்ஜான் பண்டிகை ஆடு விற்பனைகள் குறைந்து காணப்பட்டது!
அடுத்த
திமுக நிர்வாகிகளுடன் MLA மார்கண்டயேன் ஆலோசனை.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026