தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மகன் பாஸ்கர்வேல் (14), இவர் பூதலாபுரம் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் ஊரில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்ற பாஸ்கர்வேல் அதிக ஆழப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து கிராம மக்கள்  நீண்ட தேடுதலுக்கு பின் நீரில்மூழ்கி இருந்த பாஸ்கர்வேல் உடலை மீட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார் பாஸ்கர்வேல் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.