தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (42), கதிர்வேல் ஆட்டோ மூலம் விளாத்திகுளம் சிதம்பரம் நகர் பகுதியில் இருந்து வேப்பலோடை உப்பளத்திற்கு ஆட்களை ஏற்றி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் வேப்பலோடை உப்பள வேலை முடிந்த பின் வேப்பலோடையிலிருந்து விளாத்திகுளம் நோக்கி ஆட்டோவில் உப்பளத் தொழிலாளர்களை ஏற்றி வந்து கொண்டிருந்தது, அப்போது மீனாட்சிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது,
இதில் ஆட்டோ ஓட்டுனர் கதிர்வேல், வேல் மாரியம்மன் (39), அருளம்மாள்(38), ஞானசிகாமணி (52), பேச்சியம்மாள்(35), முத்துமாரி(43), ராசம்மாள்(43) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது, இதனை அடுத்து காயமடைந்தவர்களை, விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதில் ஞானசிகாமணிக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
ஆட்டோ கவிழ்ந்து விபத்து -7 பேர் காயம்.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026