தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  மஞ்சள் நாயக்கன்பட்டி அருகில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த முத்துப்பெருமாள் என்பவரின் மகன் தங்கராமன்(22) என்பவர் ஓட்டி வந்த TN58 AU 3876 என்ற வாகனப் பதிவெண் கொண்ட Hero Honda இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.65 650 கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தி விதிகள் அமலில் இருக்கும் போது உரிய ஆவணங்கள் இன்றி தங்கராமன் கொண்டு சென்ற ரூ.65,650 பணத்தை முதுநிலை ஆய்வாளர் சுடலைமணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு சார் நிலை கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.