தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டி அருகில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது விருதுநகர் மாவட்டம் ராஜீவ்காந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் விக்ரம் (21) என்பவர் ஓட்டி வந்த TN67 AU 5009 என்ற வாகனப் பதிவெண் கொண்ட Suzuki Access 125 இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.60,050 கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது உரிய ஆவணங்கள் இன்றி விக்ரம் கொண்டு சென்ற ரூ.60,050 பணத்தை இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு சார் நிலை கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.