தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விருது : அரசு ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து!மாற்றுதிறனாளிகளின் நலனில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தமிழக முதல்வரிடம் விருது பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வாழ்த்து தெரித்தனர்.சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்கான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்-க்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார். இந்நிலையில் முதல்வரிடம் விருது பெற்ற மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்