தூத்துக்குடியில் மஹாலய அமாவாசையை-யொட்டி பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த சுமார் 2-ஆயிரத்து 25-கிலோ காய்கறிகளை கொண்டு உலகம் செழித்து நல்ல மழை பெய்து விவசாயம் பெருகி நாட்டு மக்கள் நோய் நொடி இன்றி வாழ வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.இதில் திராளன பக்தர்கள் கலந்துகொண்டு ப்ரிதியங்கரா தேவியை வழிபட்டனர்.மஹாயல அமாவாசையை-யொட்டி இன்று தூத்துக்குடி காலபைரவர் சித்தர் பீடத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.  இதில் கலந்துகொண்ட பக்தர்கள் பலர் கேரட்,பீட்ரூட், கருணை கிழங்கு,உருளை கிழங்கு,என  சுமார் 2-ஆயிரத்து 25-கிலோ  காய்கறிகளை காணிக்கையாக வழங்கினர் இந்த காய்கறிகளை கொண்டு உலகம் செழிக்கவும் மழை வளம் செழித்து விவசாயம் பெருகி நாட்டு மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி வாழ வேண்டி மஹா யாகம் நடைபெற்றது.  இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பிரத்தியங்கிரா தேவியை வழிபாடு செய்தனர் பின்னர் யாகத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.