தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 450 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்; ஒருவர் கைது.தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் இலங்கைக்கு பெட்ரோல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, தனிப்படை போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, கடற்கரையில் தயார் நிலையில் இருந்த ஒரு பைபர் படகை சோதனை செய்த போது தலா 50 லிட்டர் வீதம் 9 கேன்களில் 450 லிட்டர்  பெட்ரோல் மற்றும் இன்ஜின் ஆயிலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் 5 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் படகில் இருந்த அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த  ஜெயக்குமார் (33), என்பவரை கைது செய்தனர். படகின் உரிமையாளரான இனிகோ நகரை சேர்ந்த போஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.