கோவில்பட்டியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் - விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி!  தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 06.10.2023 முதல் 12.10.2023 வரை தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலூகா அலுவலகம்  சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  கோவில்பட்டி கோட்டாட்சியர் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்  கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஷ்டி பாய் கலந்து கொண்டு கொடியசைத்து மினிமாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.  இதில் கோவில்பட்டி தாசில்தார் லெனின், வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், வருவாய் அலுவலர் ராஜசேகர், கிராம நிர்வாக அலுவலர் சந்திர சூடாமணி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முதல் திட்டங்குளம் வரை மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் திரளான இளைஞர்கள், பள்ளி,  கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்..