நடத்தையியல் சந்தேகம் - நெஞ்சில் ஏறி மிதித்து மனைவியை கொலை செய்த கணவன் கைது- ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல சுப்பிரமணியபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவர் தனது மனைவி மாரியம்மாள் என்பவர் நடத்தில் சந்தேகப்பட்டு நெஞ்சில் ஏறி மிதித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் மாரியப்பன் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் . டிரைவரான இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு ஆண் பெண் இரண்டு குழந்தைகள் உள்ளது. மாரியப்பன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவ்வப்போது மனைவியை தாக்கியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாரியம்மாள் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மாடு மேய்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது அப்போது வழக்கம் போல மாரியப்பன் மது அருந்திவிட்டு மனைவி மாரியம்மாளுடன் தகராறு செய்துள்ளார். மேலும் மாரியம்மாளை கீழே தள்ளிவிட்டு நெஞ்சில் ஏறி மிதித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நெஞ்சு எலும்பு நொறுங்கி ரத்த வெள்ளத்தில் மாரியம்மாள் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டப்பிடாரம் போலீசார் விரைந்து சென்று மாரியமாளைமீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் கிடைத்ததும் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மாரியப்பன் சிப்காட் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இதையடுத்து மாரியப்பனை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.