மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், பற்றி எரியும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தவறிய மத்திய அரசு பதவி விலக வலியுறுத்தியும் கோவில்பட்டியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் விஜயலட்சுமி அவர்கள் தலைமை வகித்தார்.இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட துணை தலைவர் தெய்வேந்திரன் அவர்கள் முன்னிலை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்கம் மையம் மாவட்ட நிர்வாகி தோழர் மோகன் தாஸ் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார், மாற்றுத்திறனாளி சங்கம் முன்னாள் மாநில செயலாளர்  முத்துக்காந்தாரி,  விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சக்திவேல் முருகன் உரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்க மைய மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, காப்பீட்டு கழக கோட்டச் செயலாளர்,தேவப்பிரகாஷ் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் காசி,பொருளாளர் வயண பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ,மாதர் சங்க நிர்வாகிகள் சித்ராதேவி, ஜானகி, விஜயா, வாலிபர் சங்க நிர்வாகி இசக்கி,இந்திய தொழிற்சங்க நிர்வாகிகள் அந்தோணி செல்வம், பாலசுப்பிரமணியன், சின்னத்தம்பி, வெங்கடகிருஷ்ணன், முத்துச்சாமி, வேலுச்சாமி,முருகன் உட்பட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.