கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  அனைவரைக்கும் கிடைக்காது என்ற வதந்தியை பலர் பரப்பி வருகின்றனர் அதனை யாரும் நம்ப வேண்டாம் என தமிழக சமூக நலன் மற்றும்  மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான  விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படும் முகாமை   தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார் அப்போது பெண்களிடம் கலைஞர் உரிமைத்தொகை    தகுதி உள்ள அனைவருக்கும்  கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்,அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 600-கடைகளில் மொத்தம் 4-லட்சத்து 39-ஆயிரத்து 999- குடும்ப அட்டைகள் உள்ளன.  இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 8-ஆயிரத்து 563-விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் 80-சதவீதமான பணிகள் நிறைவடையுன என எதிர்பார்க்கப்படுகிறது மாநில அளவில் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகளை  வைத்து கணிக்கும்போது  தூத்துக்குடி மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது என்ற அவர் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் வழங்கும் இந்த பணிகள் நடைபெற்று வருவதால்  நெர்வொர்க் பிரச்சினை ஏற்பட்டது இதன் காரணமாக மேனுவல் முறையில் முகாம்களில்  பதிவு நடைபெறுகிறது.மகளிர் உரிமைத்தொகை  அனைவரைக்கும் கிடைக்காது என்ற வதந்தியை பலர் பரப்பி வருகின்றனர் அதனை யாரும் நம்ப வேண்டாம் எதிர்கட்சியினை பொறுத்தவரையில் பாராட்டமாட்டார்கள் குறைகள்தான் சொல்வார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். பேட்டி.கீதா ஜீவன் அமைச்சர்.