என்ஜின் பழுது காரணமாக கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் அந்த்யோதயா விரைவு ரெயில் 40 நிமிடங்கள் நிறுத்தம்...  நாகர்கோவில் - சென்னை தாம்பரம் இடையே அந்த்யோதயா விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.  வழக்கம் போல நாகர்கோவில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு அந்த்யோதயா விரைவு ரெயில் பயணிகளுடன் கிளம்பி  வந்த நிலையில்,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்தபோது திடீரென ரயில் என்ஜின் பழுது காரணமாக அந்த்யோதயா விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது. என்ஜின் பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து 40 நிமிடங்கள் தாமதமாக கிளம்பி சென்றது. இதனால் சிறிது நேரம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.