தூத்துக்குடியில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் 40 ஆயிரம் ரூபாய் அவதாரம் -அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி செல்வகுமார்! தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். கூலித் தொழிலாளியான இவர், பட்டா மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் சந்திரயா (வயது 69) என்பவரிடம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதற்காக சந்திரயா ரூ.500 லஞ்சம் கேட்டாராம். இதைத் தொடர்ந்து நாகராஜ் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். தொடர்ந்து 15.3.2010 அன்று நாகராஜ், சந்திரயாவிடம் பணம் கொடுக்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திரயாவை கையும் கலவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வக்குமார் குற்றம் சாட்டப்பட்ட சந்திரயாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
தூத்துக்குடி
கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில் -அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி செல்வகுமார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சின்னூரில் சூரிய கூடார உலர்த்தி திறப்பு விழா!
அடுத்த
பழுதாகி நின்று கொண்டு இருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல்?
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026