விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரைப் பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணியினை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் சென்னையில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணியினை துவக்கி வைத்தார்இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம்,கண்மாய்கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர்  விதைத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணியினை,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றியசெயலாளர் சின்னமாரி முத்து, வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ்விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.