தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மார்த்தாண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்துகரும்புள்ளி, கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கிராம பொதுமக்கள் என ஏராளமான உடன் இருந்தனர்.