தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னவன்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த
சுப்புராஜ் நாயக்கர் என்பவரின் மகன் முத்துச்சாமி (75) முத்துச்சாமி 15 எருமை மாடுகளை வைத்து மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில்
வழக்கம் போல் செங்கோட்டை காட்டுப்பகுதியில் மாடுகளை
முத்துச்சாமி மேய்த்துக் கொண்டிருந்தார், அப்போது செங்கோட்டை ராமசாமி நாயக்கர் என்பவரது தரிசி
நிலத்தில் மின் கம்பத்திலிருந்து மின்வயர் அறுந்து கிடந்த நிலையில், வயரின் மீது எதிர்பாராத விதமாக ஒரு எருமை மாடு மிதித்ததில், சம்பவ இடத்திலேயே ஒரு எருமை மாடு மற்றும்
பரிதாபமாக உயிரிழந்தது, இதனை அடுத்து
புதூர் கால்நடை மருத்துவர் நந்தகுமார்,
இறந்த எருமை மாட்டை பிரேதப்
பரிசோதனை செய்த பின் அங்கேயே
புதைத்தனர். இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
News
மின்சாரம் தாக்கி எருமை மாடு பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026