தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் மயில்ராஜ்(58), மயில்ராஜ் அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13- 01-2024 சனிக்கிழமை விளாத்திகுளத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் நெடுங்குளம் செல்லும் பொழுது கீழ விளாத்திகுளம் விளக்கு அருகே சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில், மயில்ராஜ் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து முதலுதவி சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்த பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,17-01-3024 புதன்கிழமை சிகிச்சை பலனின்றி மயில்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து
வாகன விபத்தில் அரசு ஒப்பந்ததாரர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இளம்புவனம் கிராமத்தில் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா!
அடுத்த
உயிரிழந்த (7) வயது சிறுவன் அஸ்வின்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்கண்டேயன்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026